2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு, அரசமைப்புக்கமைய, அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வு காணப்பட்டுள்ளமையைப் பாராட்டுவதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் தீர்வு பெறப்பட்டுள்ளமையானது இலங்கையுடனான நிரந்தர உறவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடத் தூதுவர்கள், நோர்வே தூதுவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சபையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .