2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒசாமா பின்லேடனின் ​போதனைப் புத்தகத்தை வைத்திருந்தவர் கைது

Editorial   / 2019 மே 22 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப் படத்துடன் கூடிய போதனைப் புத்தகமொன்று மீட்கப்பட்டுள்ளது.

 அத்துடன் சந்​தேகத்துக்கிடமான இறுவட்டுகள், MI  ரக சிம் அட்டைகள் இரண்டுடனான ​அலைபேசி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில் கல்முனை பொலிஸ் விசேட படையணியால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .