2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள், 3 வைத்தியர்களுக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் ஒரே  வைத்தியசாலையில் 26 தாதிகள் மற்றும் 3 வைத்தியர்களுக்கு  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள வோக்ஹார்ட் வைத்தியசாலையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 தாதிகள் மற்றும் 3 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பிரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி), வைத்தியசாலை பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. 

அத்துடன், வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து இரண்டு முறை, எதிர்மறை முடிவுகள் வரும் வரையில் வைத்தியசாலையில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X