2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சாவை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரை சுற்றிவளைத்த யானை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 21 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுகம்வெகர காட்டில்  சட்டவிரோதமாக பயிரிடப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கையை சுற்றிவளைப்பதற்காகச் சென்ற பொலிஸார் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி குறித்த சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்ததுடன், நேற்று  (20) அதிகாலை கஞ்சா செய்கைப் பண்ணப்படும் இடத்திற்கு அருகில் பொலிஸார் சென்ற வேளையிலேயே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் காயமடைந்ததாகவும், இவர்களை காப்பாற்றுவதற்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போன துப்பாக்கியைத் தேடி பொலிஸ் விசேட படையணி மற்றும் கதிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .