2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடந்த 24 மணிநேரத்துக்குள் 5 பேர் நீரில் மூழ்கி மரணம்

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை- கெலிடோ கடலுக்கு குளிக்கச் சென்ற  11 வயதான இரண்டு சிறுமிகள் கடலில் மூழ்கியதையடுத்து, காப்பாற்றப்பட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று மாலை வெயாங்கொடை- தல்கஸ்மொடே – எனிகட்டுவ பகுதியில் உள்ள தீஎல்ல ஆற்றுக்கு குளிக்கச் சென்ற 16 மற்றும் 17 வயதான இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் மஸ்கெலியா, லாஜ்வில் பகுதியின் கார்ட்மோர் ஆற்றில் குளிக்கச் சென்ற 69 வயதான பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .