2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடற்படைத் தளபதியாக ட்ரவிஸ் சின்னையா நியமனம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக, இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா,  நியமிக்கப்பட்டுள்ளார்.

1982ஆம் ஆண்டு, கடற்படையில் இணைந்த இவர், எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதிரான பல யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான  இவர், 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ரவீந்தர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .