2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடலுக்கு செல்லவேண்டாம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்ளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, பலப்பிட்டிய, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X