2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடவத்தை பகுதிக்கு நீர் விநியோகம் தடை

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை பகுதியில் சில பிரதேசங்களுக்கு நீர் விநி​யோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கடவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை நீர்க்குழாய் ஒன்று வெடித்ததன் காரணமாக அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன இதன் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி -கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை, றாகம வீதி, கிரிபத்கொட வரையான கண்டி கொழும்பு வீதி, கனேமுல்ல வீதி ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X