2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்டுநாயக்கவில் தரித்துப் பறந்தார்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜர் நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு, சுமார் இரண்டு மணிநேரம், கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஓய்வறையில் தங்கியிருந்து, மீண்டும் பயணமாகியுள்ளார்.   

இந்தோனேஷியாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில், நைஜர் ஜனாதிபதியும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், இன்று (17) அதிகாலை 3.20 மணியளவில், குறித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன்பின்னர். அந்த விமானம், அதிகா​லை 5.40 மணியளவில், இந்தோனேஷியாவுக்குப் பயணமானது.   

நைஜர் நாட்டு ஜனாதிபதியுடன் அந்நாட்டு தூதுக் குழுவினர் எழுவரும், குறித்த விமானம் இந்தோனேஷியாவுக்குச் செல்வதற்கு ஆயத்தமாவதற்குள், கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள ஓய்வறையிலேயே தங்கியிருந்தனர்.   

அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து, அதே விமானத்தில், அவர்கள் இந்தேனேஷியாவுக்குப் பயணமாகியுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .