2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கண்சிகிச்சைப் பிரிவுக்கு தற்காலிக பூட்டு

J.A. George   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண் சிகிச்சை பிரிவின் ஊழியர் ஒருவர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக PCR பரிசோதனையில் உறுதியாகியுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்ணான்டோ கூறியுள்ளார்.

எனினும், வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளின் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாகவும் கண் சிகிச்சை பிரிவின் ஏனைய ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .