2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கணவன் கொலை: மனைவி பொலிஸில் சரண்

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்- அருணோதாகம பிரதேசத்தில்  கணவனை தாக்கி கொலை செய்த மனைவி ஒருவர் இன்று காலை(17)  பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் இடையில் இன்று (17) அதிகாலை ஏற்பட்ட சண்டையில்,மனைவி கோடரியால் தனது கணவனை வெட்டி கொலை செய்துள்ளதுடன், பின்னர் கோடரியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

46 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இராணுவத்தில் சேவையாற்றிய ஒருவர் எனவும், இரண்டாவது முறையாக குறித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ,பொலிஸ் நிலையத்தில் சர​ணடைந்த மனைவியை கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .