2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கண்​டியில் 130 பேருக்கு நட்டஈடு வழங்கி வைப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 19 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையின் போது, சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கும் முதற் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின், பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, அக்குரணை, தெல்தெனிய மற்றும் கங்கவட்ட கோரலை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 130 பேருக்கே இன்று நட்டஈடு வழங்கப்பட்டது.

குறித்த நட்டஈட்டை சிறைச்சாலைகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதுடன், குறித்த வன்முறைகளால் 65 வர்த்தக நிலையங்களும், 66 வீடுகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X