2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கத்தி குத்தில் மூவர் காயம்

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது மனைவி உள்ளிட்ட மூவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பத எனும் பிரதேசத்தில் நேற்று (14) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரவு நேரத்தில்  தமது மனைவியை இரகசியமாக சந்திக்க வருகைத்தந்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து, தனது மனைவியையும், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோரையும் குறித்த நபர் இவ்வாறு கத்தியால் குத்தியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தி குத்தில் காயமடைந்த மூவரும் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .