2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களுக்காக, காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட, கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் பின்னர், இதுவரை காலி மாவட்டத்தில் 4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .