2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கொரோனா ஜூனில் மேலும் உக்கிரமடையும்’

Niroshini   / 2021 மே 17 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல், அடுத்த மாதக் காலப்பகுதியில் மேலும் உக்கிரமடையும் என்று, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பிரிவின் பேராசிரியர் டொக்டர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலை தீவிரமடைந்துள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் மரண வீதம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இருப்பினும், நாட்டுக்கும் இந்த நிலைமை தற்போது உக்கிரமடைந்தில்லை. எவ்வாறெனினும், அடுத்த மாதமளவில், நிலைமை உக்கிரமடைய வாய்ப்புள்ளது. அதனால், தனிநபர் சுகாதாரப் பாதுகாப்பை, மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .