2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கலைப்பீடத்துக்கு மேலுமொரு வாரம் பூட்டு

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை மேலுமொரு வாரம் மூடவேண்டியேற்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக்குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தின் காரணமாகவே கலைப்பீடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக உபவேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அவர் இவ்விடயம் தொடர்பாக நாளை (24) கலந்துரையாடுவதற்கு நிர்வாக சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது  கலைப் பீடத்தை மீளத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .