2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களுத்துறையில் 5 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டன

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவிலுள்ள 5 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக,  களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.


இதற்கமைய பண்டாரகம, இங்கிரிய, பிம்புர, மத்துகம, இத்தேபான ஆகிய 5 வைத்தியசாலைகளே இவ்வாறு கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த 5 வைத்தியசாலைகளிலும் 240 நோயாளர்களுக்கான கட்டில்களும் ஏனைய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிரிய வைத்தியசாலையில் 33 தொற்றாளர்களும் பிம்புர வைத்தியசாலையில் 60 தொற்றாளர்களும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .