2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு - கண்டி நகரங்களில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர் காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு இன்று (27) முற்பகல் மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவகம் கூறியுள்ளது.

அதன்படி, கண்டி நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி முற்பகல் 08.30 மணிக்கு 156 ஆக பதிவாகியுள்ளதுடன், பத்தரமுல்லை நகரில் 151ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு நகரின் தூசு துகள்களின் செறிவுச் சுட்டி தற்போது 129  ஆக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .