2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கழுதைகளுக்கு கிடைக்காது’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புத்தளத்தில் நாங்கள் கழுதைகள். நாங்கள் புத்தளம் கழுதைகளென நாடே கூறுகின்றது. நாங்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், புத்தளம் கழுதைகளுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்கமாட்டார்கள்” என, நீர்ப்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.  

புத்தளத்தில் நேற்று (25) இடம்பெற்ற வைபவத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது, ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சரவையில், இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக, அறியமுடிந்தது. எனினும், சனிக்கிழமை இரவு வரையிலும், அது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. புத்தளத்தைச் சேர்ந்தவர்களை கழுதைகள் என்றே அழைப்பர். கழுதைகளுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காது என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .