2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர்; மாத்தளையில் மரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய பெண்ணொருவர் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில், தம்புளை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


மாத்தளை- நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான குறித்த பெண்ணின் மகன், நீர்கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி, 10 நாள்களுக்கு முன்னர் வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியா மரணமடைந்தார் என்பதை கண்டறிவதற்காக இவரது இரத்தமாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .