2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரிவெஹேர துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் சிக்கினர்

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம்- கிரிவெஹேர ரஜ மஹா விகா​ரையின் விகராதிபதி, கொபவக தம்மின்த தேரர் மீது மெற்கொள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் இருவர் இன்று (19) பிற்பகல், திக்வெல்ல பகுதியில்  வைத்து தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தம்பதிகள் என தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காமம் புதிய நகர் பகுதி, விஹாரை மாவத்தையைச் சேர்ந்த தில்ஹானி வீரரத்ன மற்றும் அவரது கணவரான ஹேவா விதானகே சுகத் ராலாமி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், நாளை (20) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .