2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடாஓயா விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 மே 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய, தனமல்வில வீதியின் குடாஓயா இராணுவ பயிற்சி முகாமுக்கு அருகில், இரு ஓட்டோக்களும் கென்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதில், மூவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடாஓயாவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்று, தனமல்விலயிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமோர் ஓட்டோவுடன் மோதியுள்ளது. இந்நிலையில், குறித்த ஓட்டோவுக்குப் பின்னால், மிக வேகமாக வந்துகொண்டிருந்த கென்டர் ரக லொறி, மேற்படி இரு ஓட்டோக்களுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்த குடாஓயா பொலிஸார், லொறியின் சார​தியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .