Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்ப தகராறு காரணமாக, தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று, வென்னப்புவ, கடவத்தை பிரதேசத்தில், நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் தந்தைய மகன் தாக்கியுள்ளதாகவும், இதனால் தந்தை கத்தியால் மகனை குத்தியுள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மகன் மாரவிரல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago