2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளத்தில் இன்றும் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம்- அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக  இன்று ஞாயிற்றுக்கிழமை (17)  காலை முந்தல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டம் புத்தளம் கொழும்பு பிரதான வீதியின், முந்தல் நகரில் இடம்பெற்றது.

அறுவாக்காடு குப்பை தொட்டி திட்டத்தைக்  கண்டித்து சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கால முதல் எலுவான்குளம் வரையிலுள்ள புத்தளம்-கொழும்பு பிரதான வீதியோரங்களில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.

சிலாபம் மறை மாவட்டத்தின் மங்களவெளி பங்குட்பட்ட முந்தல்  சென்  யாகப்பர் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட் திரு .சமன் கித்திசிறி அடிகளார் தலைமையில் இன்று  காலையில் இடம் பெற்ற விஷேட வழிபாட்டின் பின்னர் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகருக்குப் பேரணியாக வந்த  நூறுக்கு மேற்பட்ட  கத்தோலிக்க மக்கள்  பல்வேறு  சுலோகங்களையும் ஏந்தியவாறு  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X