2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குப்பை வாளிக்குள் இருந்து தங்கம் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குப்பை வாளியில் இருந்து, நேற்று (20) இரவு 11 மணியளவில், சுமார் 19 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதியை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவரால், சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்தே. இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது,116 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக, சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .