2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குப்பைகளை வீசிய 93 பேர் கைது

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் முறைகேடான விதத்தில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டில் 93 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம், இன்று (18) தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் இணைந்து, கடந்த 14ஆம், 15ஆம் திகதிகளில் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு வடக்கில் 13 பேரும் கொழும்பு மத்தியில் 19 பேரும், கொழும்பு தெற்கில் 7 பேரும், நுகேகொடையில் 7 பேரும், கல்கிஸையில் 6 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹாவில் 26 பேரும் களனி, நீர்கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட இடங்களில் தலா ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .