2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குழந்தைக்கு மதுபானம் வழங்கிய காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பான விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, காணொளி மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் காணொளியாகப் பதிவுசெய்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறியக் கிடைத்ததையடுத்து, தற்போது விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான தேசிய வாரம், 14 - 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .