Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 22 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
86 வயதான தாயொருவர் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, கல்கிஸ்ஸ பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் அதிகாரிகளால் குறித்த தாய் காப்பாற்றப்பட்ட சம்பவமானது கல்கிஸ்ஸ கல்வலபார பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
3 பெண்களும், 1 ஆணுமென 4 பிள்ளைகளின் தாயான இவர் 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்கலினால் அமைக்கப்பட்ட கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடு காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கருத்திற்கொண்டே தாயை தனிமைப்படுத்தி வைத்ததாக அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட தாய் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago