2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கென்யாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவின் நயிபோர் நகரில் இடம்பெறவுள்ள, ஐக்கிய நாடுகள் சூழலியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கென்யாவின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை அங்கு பயணமானார்.

கென்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

‘சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புதிய தீர்வுகள்’  என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (11) ஆரம்பமான இந்த மாநாடு 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (14) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .