2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடிகாமம் பிரதேசத்தில் கேரள கஞ்சா தொகையொன்றை வைத்திருந்த, சந்தேகநபர் இருவரை கொடிகாமம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த, 22 மற்றும் 19 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றிரவு(18) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து 36 கிலோகிராம் மற்றும் 680 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளன​ர்.

இந்த சந்தேகநபர்களை இன்று(19) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X