2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேள்விகளால் கோபமடைந்த மஹிந்த; ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வௌியேறினார்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து கோபமாக இடையில் வெளியேறியிருந்தார்.

சதொச பொருட்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் குருணாகல் மேல் நீதிமன்றத்தினால் நேற்று (17) விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.

இதில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .