Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவ பகுதியில் மூன்று பெண்கள் காணாமல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(19)உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போன 19 வயது யுவதி மற்றும் 15 வயது மற்றும் 14 வயது சிறுமிகள் நேற்று(18) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
காணாமல் போன 14 வயதான சிறுமியை வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு அமர்த்த முயற்சித்த நபர் கம்பஹா - இஹலயாகொட பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணாமல் போயிருந்த 15 வயது மற்றும் 14 வயது சிறுமிகளை வீட்டுப் பணிப்பெண்களாக பணியில் அமர்த்தும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு பெண்கள் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
காணாமல் போயிருந்த 15 வயதான சிறுமயின் காதலன் என கூறப்படும் 17 வயதான இளைஞர் ஒருவரும் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
15 வயது மற்றும் 14 வயது இரண்டு சிறுமிகளையும் சிறுவர் காப்பகத்தில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago