2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொழும்பின் பல பகுதிகளுக்கு 25-31 வரை மின் விநியோகம் தடை

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு நகரில், மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் அத்தியாவசிய பழுதுபார்த்தல் பணிகள் காரணமாக, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடைக்கிடையே மின்சார விநியோகம் தடைப்படும் என, மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

இதற்கமைய இம் மாதம் 27 ஆம் திகதி முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை, கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு இம் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம்  31 ஆம் திகதி வரை இடைக்கிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .