2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகம் தடை

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (20) இரவு 9 மணிமுதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் பேஸ்லைன் வீதியில் களணி பாலத்தின் சந்தியிலிருந்து தெமடகொ​ட சந்தி வரை பிரதான வீதி உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளிலும், ஹெட்டியாவத்தை மற்றும் அதனை அணிமித்த பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, புறக்கோட்டை பகுதிகளுக்கு குறைந்தளவிலேயே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .