2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் இன்று பேரணி

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

9 கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில், கடந்த ஏழு நாட்களாகப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த தபால் ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, கொழும்பில் இன்று காலை 10:30க்கு, பேரணியொன்றை நடத்தவுள்ளது.

அஞ்சல் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை செல்லுமென்று தெரிவித்த அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர், இப்பேரணியில், சுமார் 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, மேற்படி 9 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த திங்கட்கிழமையன்று (11) பிற்பகல் 4 மணி முதல், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .