2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக, இன்றும் (17), நாளையும் (18) கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணியளவிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வாகன ஓட்டுனர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X