2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா

S. Shivany   / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 522 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மேற்படி தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 206 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அத்துடன், கம்பஹாவில் 97 பேரும், களுத்துறையில் 81 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 11 மாவட்டங்களில் இருந்தும்  நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,248 ஆக அதிகரித்துள்ளது.

 

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .