2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோட்டா விரைவில் கைது?

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, விரைவில் கைதுசெய்யப்படுவது உறுதியாகியுள்ளது என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என, ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபயவின் கைது தொடர்பாக, சட்ட, பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று, கடந்த வாரம் இடம்பெற்றது எனவும், வெளிப்படுத்தப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் காணப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்து, இதில் ஆராயப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோட்டாபய, கடந்த வாரம், நாடு திரும்பியிருந்தார். அப்போது அவர் கைதுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.
சில  அதிகாரிகளின் அறிவுரையின் பேரிலேயே, அந்த முடிவு கைவிடப்பட்டது எனத் தெரியவருகிறது.

இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்படவுள்ளார் என, தற்போது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, தான் கைதுசெய்யப்படவுள்ள விடயம், கோட்டாபயவுக்கும் தெரியுமெனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோட்டாபய, இது தொடர்பான நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .