Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்" மஹிந்த தெரிவித்துள்ளார்.
"எனவே வெகுவிரைவில் கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,அரசு மற்றும் அரசமைப்புக்கு எதிராக 'வெளிச்சம்'அமைப்பினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலை தடுக்கும் முகமாகவே அரசு கோட்டாபயவை கைது செய்ய முயல்வதாகவும்"மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
52 minute ago
55 minute ago
3 hours ago