2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’கோட்டாவின் வருகைக்கு மஹிந்தவும் அஞ்சுகிறார்’

Kamal   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3 ஆவது தடவையாகவும் ஜனாதிபதியாக  முற்படுவதால் அவரின் தரத்தை தாழ்த்திக் கொள்கிறார் என்று தெரிவிக்கும் துஷார இந்துனில் அமரசேன எம்.பி, “கோட்டாவின் வருகைக்கு மஹிந்தவும் அஞ்சுகிறார்” என்றார்.

​ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்நாட்டு மக்கள் மாத்திரமன்றி முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அச்சப்படுகிறார். காரணம், கோட்டாவின் வருகை தனது புதல்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிவிடும் என்பதை அவர் அறிந்துள்ளார்.

அதனாலே​யே, 3 ஆவது த​டவையாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகப்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது குறித்த கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதனால் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சிறிதளவு கௌரவத்தையும் அவரே தாழ்த்திக்கொள்ள முற்படுகிறார்” என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X