Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 20 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்காலை வீரகெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த மற்றும் அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், இவர்களுக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, வழக்கை இவ்வாறு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago