2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சடலத்தை மறைத்த சப்- இன்ஸ்பெக்டர் மரணம்

J.A. George   / 2021 மார்ச் 03 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்ய சென்ற போது, அவர் நேற்று தனது வீட்டிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 52 வயதான குறித்த நபர், புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரென கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .