2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டத்தரணி சுகந்திகா தற்காலிகமாக நீக்கம்

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவை சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம், அங்கத்துவத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றம் என்பவற்றை அவதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ முன்வைத்திருந்தமையால் சங்கத்தின் அங்கத்துவத்தில் இருந்து இவ்வாறு தற்காலிகமாக நீக்க்பட்டுள்ளார் என, சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோ சிலாபம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிமன்றம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை செய்ய  5 சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .