2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத சிகரெட் கடத்தல் வர்த்தகர் கைது

Editorial   / 2018 மே 20 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 1.5 மில்லியன் பெறுமதியான ஒரு தொகை சிகரெட்டுகளை, இன்று காலை கைப்பற்றியுள்ளதாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

75 சிகரெட் பெட்டிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளுக்காக டுபாய் சென்று திரும்பிய, கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேநகபர் ஒருவரே, இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் வெளியேறும் பகுதி ஊடாக, விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற குறித்த நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, போக்குவரத்துப் பொலிஸார், அவரைக் கைதுசெய்து சோதனையிட்டதாக,விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிகரெட்களை, கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்குக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக, குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .