2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சபாநாயகரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ம.வி.மு

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்காக தமது பிரதிநிதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்காக, சபாநாயகரின் அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

குறித்த தெரிவுக்குழுவுக்காக மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை சபாநாயகரே அறிவிக்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தந்த கட்சிகளுக்கு கிடைத்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைகமையவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் எனவே, இது தொடர்பில் சபாநாயகர் அறிவித்ததன் பின்னர் இன்று பகல் தமது கட்சி பிரதிநிதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .