2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பந்தன் - சி.வி சந்தித்துப் பேச்சு

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில், நேற்று (23) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   

கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், ஏனைய விடயங்களுடன் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டன.   

அங்கு எழுந்துள்ள நிலைமை பற்றி முடிவுகளை எடுப்பதற்கு முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் சகல கட்சிகளின் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.   

அது வரையில் வடமாகாணசபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவதான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் காணப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X