2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சம்பந்தன்-ரணில் இடையே ஒப்பந்தம் இல்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.கமல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, பலமுறை தமது ஆதரவு வழங்கியுள்ளதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, சம்பந்தன் - ரணில் இடையே ஒப்பந்தம் எவையும் இல்லையெனவும் கூறினார்.

அலரி மாளிகையில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில், எந்தவித ஒப்பந்தங்களும் இல்லையெனவும் வரவு - செலவுத் திட்டம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், கூட்டமைப்பு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன எம்.பி, கூட்டமைப்புடன் ஐ.தே.க இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்ட போலி ஆவணம் ஒன்றை வெளிப்படுத்தியதாகக் கூறிய அஜித் பி.பெரேரா, லக்ஷ்மன் யாப்பா எம்.பி க்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியினால், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .