2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்தவர் கைது

Editorial   / 2019 மே 18 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணினி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், இன்று (18) அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.

இன்று (18) அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரனின் தேடுதலின் போது, மடிக்கணினி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர், குறித்த கணினியை சோதனை மேற்கொண்டபோது, அதிலிருந்து சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், அக்கணினியை பாவித்தவரின்  வட்சப் சமூக வலைத்தளத்திலும் குறித்த புகைப்படங்கள் காணப்பட்டதை அடுத்து, அவ்வீட்டில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பாடசாலை ஆசிரியரான முஹமட் இஸ்மாயில் ஜஹானா என்பவர் கைது செய்யப்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதேவேளை, இச்சுற்றிவளைப்பின் போது மற்றுமொரு நபரும் அடையாள அட்டை இன்றி காணப்பட்டமையால் பொலிஸாரால் கைதானார்.

இவ்வாறு பொலிஸ் நிலையத்துக்கு கைதாகி அழைத்து செல்லப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியரை நீண்ட நேரம் விசாரித்த பொலிஸார், வாக்குமூலம் ஒன்றை பெற்று விடுதலை செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X