2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சார்க் நாடுகளின் சாரணர் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹர்மன் லூஸ் வெற்றிக் கிண்ண முகாமை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள ஐந்து சார்க் நாடுகளின் தேசிய சாரணர் குழு இன்று காலை(20) கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சாரணர் குழுக்களும், அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஓவ்வொரு குழுவுக்கும் பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளை வழங்கியதுடன், அந்த அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .