2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது

J.A. George   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  அநுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 58 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர், அநுராதபுரம் நகரத்தை அண்மித்த பகுதியில் வைத்து மூன்று சந்தர்ப்பங்களில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X